Wednesday, August 13, 2008

காதலியின் கோலம்....



பனித்துளிகளை வாரி இறைத்து
உடல் நனைய உடை உடுத்தி
குளித்த வாசனையுடன்
நீ வாசலில் இடும்
கோலத்தைக் காணவே
சீக்கிரமாய் வந்துவிடுகிறது
சில்லென்ற விடியல்...


நிலவினை அரைத்து
நீள்வட்டக் கோடுகள் ஆக்கி
விண்மீன்கள் பறித்து
புள்ளிகளாய் வைக்கிறாய்
கோலத்தில்....

ஒன்றும் இல்லை வானத்தில் !

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...