Monday, August 18, 2008

உடைந்துவிழும் பெண்மை...

அணைக்கும்பொழுது திமிறியதில்
அழுத்தி உடைந்துவிட்ட
என் கண்ணாடி வளையல்களை
ஒன்றுக்கு பத்தாய் வாங்கித்தருகிறேன் என்கிறாய் !


உன் ஒவ்வொரு அணைப்பின்பொழுதும்
சுக்குநூறாய் உடைந்துவிழும்
என் வெட்கம் கலந்த பெண்மைக்கு பதிலாய்
எதை வாங்கித் தருவாய் !

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...