Wednesday, August 13, 2008

நிஜமான கற்பனை...


எத்தனையோ பேர்
வந்துபோகையிலும் தங்கிப்போகையிலும்
அமைதியாய் இருந்த என் இல்லம்...


நான் தனிமையில் இருக்கையில் மட்டும்
என்றோ நீ என்னுடன் இருந்த
காட்சிகளை எல்லாம்
கண்முன்னே அரங்கேற்றுகிறது !


என் அறைகள் முழுவதும்
நிறையும் உன் வாசத்தை
நினைவுகளில் சுமந்தபடியே
அமைதியாய் அமர்ந்திருக்கிறேன்
அசைவுகள் ஏதுமின்றி...


அடிக்கடி எனக்குமட்டும்
கேட்கின்ற உன் சிரிப்பு சத்தங்களும்
நீ அன்போடு என்னை அழைக்கின்ற
அந்த சத்தமும்
இப்பொழுதெல்லாம் எனக்கு பழகிவிட்டது !


ஒருவேளை நீ நிஜத்தில்
என்முன் வந்து நின்றாலும்
பேசினாலும்கூட
இதுவும் கற்பனை என்று
நான் உன்னைக் கடந்துபோகக்கூடும்
எச்சரிக்கையாய் இரு...

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...