நீ சூரியன் என்று மாறிவிட்டாய்…
பூமியாய் எப்போதும் உன்னையே
சுற்றிச் சுற்றி வருவதே
எனக்கு போதுமானதாக இருக்கிறது !
உன்னை நெருங்கவும் முடியாமல்
விலகவும் இயலாமல்
ஒரு எண்ணக்கோட்டுக்குள்
அந்த எல்லைக்கோட்டுக்குள்
உனையே சுற்றி வருகிறேன் !
சில பாதி பகல் சில பாதி இரவு
மாறி மாறி நடக்கிறது என்னுள் !
உனக்கான நினைவுகளை எல்லாம்
சந்திரக் கூட்டினுள் சேமித்து வைக்கிறேன் பத்திரமாய் !
உன் அழகின் வெளிச்சம் பட்டுப் பட்டு
இப்பொழுதெல்லாம் இப்படித்தான்
ஒளிவெள்ளம் வழிய
வாழ்ந்துகொண்டிருக்கிறேன் நான் உன்னால் !
Subscribe to:
Post Comments (Atom)
பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...
ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...
கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...
தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...
பிரியமுடன்...
பிரியன்...
No comments:
Post a Comment