Sunday, August 17, 2008

கரைந்த நிமிடங்கள்...


நாள் முழுக்க பேசிக்கொண்டு
பக்கத்திலேயே இருந்த பிறகும்
விடைபெறும் சமயத்தில்
என் கைகைளை இறுகப் பற்றிக்கொள்வாயே…


அந்த ஒருநொடியில்
ஒட்டுமொத்தமாய் கரைந்துபோனது
இதுவரை கடந்த அத்தனை நிமிடங்களும் !


இன்னும் கொஞ்சநேரம்
இப்படியே கையை பற்றிக்கொண்டு இருப்பாயா
என மனம் ஏங்கினாலும்…


“சரி நேரமாயிடுச்சு கிளம்பட்டுமா… “என கேட்கும்
என் பொய்யான உதடுகளை என்ன செய்ய !

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...