காதல் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளோடு
என்னருகில் நீ இருக்கின்ற காலங்களில்…
என்னுயிரில் நீ இனிக்கின்ற நேரங்களில்…
உன் வெட்கங்களை மட்டுமல்லாது கோபங்களையும்
புன்னகைகளை மட்டுமல்லாது கண்ணீரையும்
அழகை மட்டுமல்லாது அன்பையும்
அணுவணுவாய் ரசிக்கிறேன் நான் !
ஆனால் நீயோ என்னைப் பார்க்கும்பொழுதெல்லாம்
நானுன் ரசிகை என்கிறாய் !
தீராத பசிகொண்ட என் ரசனைகளுக்கு
திகட்டாத உணவளித்துக் கொண்டிருப்பவள்
நீதான் என்னும் உண்மை
உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை…
Subscribe to:
Post Comments (Atom)
பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...
ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...
கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...
தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...
பிரியமுடன்...
பிரியன்...
No comments:
Post a Comment