Monday, August 25, 2008

விடைகளில்லா கேள்விகள்…

காய்ச்சிய இரும்பைப்போல்
கருவிழிகளுக்குள் நுழைந்து செல்லும் பார்வைகளை
எங்கிருந்து எடுத்து வந்தாய் ?


மற்றவர்களைப் பார்ப்பதற்கும்
என்னைப் பார்ப்பதற்க்குமென
தனித்தனி பார்வைகளை
எப்படி நீ திரட்டி வைத்தாய் ?


தூரத்தில் நான் வரும்பொழுதே
விழியோரத்தில் பார்த்துவிட்டு
“ஹாய் எப்ப வந்த…” என
எதுவுமே தெரியாததுபோல் கேட்க
எப்பொழுது நீ கற்றுக்கொண்டாய் ?


எதுவும் பேசாமல்
உன்னையே உற்றுப் பார்க்கும்
என்னை நீ மெல்லக் கிள்ளி
“சீ போடா…” எனச் சொல்ல
எங்கிருந்து வெட்கம் எடுத்தாய் ?


கேள்விமேல் கேள்விகள் கேட்டு
நானும் உன்னை நச்சரிக்க
“எல்லாம் உன்னாலதான்…” என்று
என் மார்பில் புதைந்துகொண்டாய் !

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...