Monday, August 18, 2008

நிறுத்திய துடிப்புகள்...

என் மார்பில் நீ கன்னம் வைத்து
தூங்கிப்போகும் வேளைகளில் எல்லாம்
என் இதயத்துடிப்புகளையும்
நிறுத்தி வைக்கிறேன்…


அந்த மெல்லிய சத்தத்தில்
நீ விழித்துவிடக்கூடாது என்பதற்காக !


ஒரு சின்னப் பிள்ளைபோல
உன் மடியில் முகம் புதைத்து
அழவேண்டுமென ஆசையாய் இருக்கிறது…


அதற்கான சோகங்களைத்தான்
தேடிக்கொண்டிருக்கிறேன்…

ஏன் அழுகிறாய் எனக் கேட்கும்
உனக்கு ஏதாவது பதில்சொல்லவேண்டுமே…

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...