மாலைநேரக் கடற்கரையில்
மணலோடு சேர்த்து
காதல் என்னும் பெயர் பூசிக்கொண்டு…
படகோரங்களிலும் குடைகளுக்குள்ளும் புதைந்துகொண்டு
உடல்கள் இறுகிக்கிடக்கும் ஜோடிகளுக்கு மத்தியில்…
வீட்டிற்கு எடுத்துச்செல்லமுடியாதென தெரிந்தும்
சின்னப்பிள்ளை போல ஓடியோடி
கிளிஞ்சல்கள் பொறுக்கி
விளையாடிக்கொண்டிருக்கும் என்னை…
தூரத்தில் தனியே அமர்ந்தபடி
ரசித்துக்கொண்டிருக்கும் உன்னை…
உன் காதலின் ஆழத்தை…
என் காதலின் நீளத்தோடு அன்றி
வேறு எதனோடு நான் ஒப்பிட முடியும் !
Subscribe to:
Post Comments (Atom)
பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...
ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...
கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...
தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...
பிரியமுடன்...
பிரியன்...
No comments:
Post a Comment