Wednesday, July 30, 2008

கோபப் பரிசு…

யார் மீதோ கொட்டமுடியாத
உன் கொந்தளிப்புகளை எல்லாம் என்மேல் ஏற்றி…

ஒட்டுமொத்த கோபத்தியும் வார்த்தைப் புயலாக்கி
என்மேல் எறிகிறாய் !

அதற்குக்கூட உனக்கு
உரிமையானவள் நானென்பதால்
அதிலிருந்து எனக்கான தென்றலை மட்டும்
எடுத்துக்கொள்கிறேன் !

கோபம் தணிந்தபின் நீ வந்து கெஞ்சும்
கொஞ்சல்களுக்கு பரிசளிக்க அவை தேவைப்படும்…

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...