Monday, August 25, 2008

ஆறாத தழும்பு…

அன்றொருநாள்
காதலின்வலி உடல்வலியை மிஞ்ச...
ரத்தம் வழிய வழிய
பழைய ஊசியால் கையைக் கிழித்து...
என் முன்னாள் காதலியின் பெயரை
சுகத்தோடு பதிந்துவைத்த
அந்த தழும்பை மெதுவாய் தடவியபடியே…


“இது என்னப்பா…” எனக் கேட்கும்
என் சின்னப்பிள்ளைக்கு
ஒரு பொய்யான புன்னகையைத்தவிர
வேறு எதை நான் பதிலாகத் தரமுடியும்…

1 comment:

Anonymous said...

அருமையாய் இருக்கிறது பிரியன்....


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...