உன் முகக் கண்களைப் பார்த்திட்டபின்
என் நகக் கண்களும் பார்வை பெறும் !
உன் நிழல் என்மீது விழுகையிலே
என் நிஜம் பொய்யோடு போட்டியிடும் !
உன் பளீர் புன்னகை தாக்கிட என்மேல்
சுளீர் சுளீரென வலியெடுக்கும் !
உன் உடை இடை ஜடை இழுக்கையில் எல்லாம்
குடை பிடிக்கும் மழை எனை நனைக்கும் !
சலக் சலக்கென்று அசைகின்ற இமை நெஞ்சை
சரக் சரக்கென்று கிழித்தெறியும் !
தடக் தடக் என துடிக்கின்ற இதயம்
படக் படக்கென்று முறிந்து விழும் !
முழு எடை குறைந்து உடல் காற்றில் எழும்..
என் பெயர் மறந்து உயிர் உன்னைத் தொழும் !
தொட்டுவிடும் தூரத்தில்
வெட்கி நீ நிற்கையில்…
வரிசையான வசனகவிதைகளுக்கு இடையில் கொஞ்சம் சந்தமிட்டு பார்க்கலாமெனத் தோன்றியது…
Subscribe to:
Post Comments (Atom)
பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...
ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...
கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...
தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...
பிரியமுடன்...
பிரியன்...
No comments:
Post a Comment