Wednesday, August 13, 2008

வெயிலின் பயணம்...

வண்ணக் கதிர் வானம் விலகிட
வண்டித் தடம் பதிந்து வழிமாறும்
வெயிலின் பயணம் !

மஞ்சள் பூசும்
மாலைநேர மரயிடுக்குகளில்
மெல்ல வழிந்துகொண்டிருக்கும்
இருளின் ஜனனம் !

தட்டுத் தடுமாறி
விட்ட இடம்தேடி
அலைந்துகொண்டிருக்கும்
சில பறவைக்கூட்டம் !

இல்லம் சேர விரைந்துகொண்டிருக்கும்
வண்டி மாடுகளோடு...

அவைகளின் மணியோசைகளுக்கு
அழகாய் தலையாட்டியபடி...

இருட்டும் சேர்ந்து அமர்ந்து
பயணம் செய்துகொண்டிருக்கும்...

ஒளிவீசிக்கொண்டிருக்கும்
அந்த சிவந்த லாந்தர் விளக்கை
முறைத்தபடியே...

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...