Monday, August 18, 2008

இரவல் கனவுகள்

கஞ்சாச் செடிபோல
இழுக்க இழுக்க போதைதரும்
உன் பெண் வாசத்தில்
கட்டுண்டு போனது
என் ஒட்டுமொத்த ஆணவமும் !


பேர் தெரியாத
இதற்குமுன் அறிந்திராத முகர்ந்திராத
காட்டுப்பூக்களைப்போல
விதவிதமாய் மலர்ந்து சிரிக்கும்
உன் வண்ணப் புன்னகைகளை
நிரப்பி அலைகிறது என் ஞாபகம் !


யாருமற்ற ஒத்தையடிப் பாதைகளாய்
வளைந்து நெளியும்
உன் உள்ளங்கை ரேகைகளுக்குள்
சத்தமின்றி தனிமையில்
பயணிக்கிறது என் இதயம் !


உன்னை எதிரில் காணுகிற
வேளைகளில் எல்லாம்
சிறகுகள் முளைத்துவிடுகிறது
என் இமைகளுக்கு !


நதியில் நகர்கின்ற படகைப்போல்
உன் அழகில் மெதுவாய்
மிதந்தபடி இருக்கின்றன..

எனது இரவுகளுக்காக
உன்னிடம் நான்
கடன் வாங்கி வைத்திருக்கும்
இரவல் கனவுகள் !

1 comment:

ச.பிரேம்குமார் said...

அருமையாய் இருக்கிறது கவிதை

//உன்னை எதிரில் காணுகிற
வேளைகளில் எல்லாம்
சிறகுகள் முளைத்துவிடுகிறது
என் இமைகளுக்கு !//

:)


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...