Monday, August 18, 2008

ஆழமான புரிதல்கள்...

சில சமயங்களில்
நீ கோவிலுக்குப் போகலாம் வா.. என
ஆசையோடு அழைக்கும் நேரங்களில்
இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு வேண்டாமே…
எனச் சொல்லும் என் வார்த்தைகள் முடிவதற்குள்…


“ரொம்ப வலிக்குதாம்மா…”எனக் கேட்கும்
வாஞ்சையான உன் அக்கறையில் நிறைந்திருக்கிறது…

பெண்மையின் மீதும்…
என் மீதும்…
நீ கொண்ட ஆழமான புரிதல்கள் !

1 comment:

Aruna said...

அழகான ஆழமான புரிதல்கள்.
அன்புடன் அருணா


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...