Wednesday, August 13, 2008
எதிர்பாரா தருணத்தில்...
எதிர்பாராமல் என்னைக்கண்டு...
ஆச்சர்யத்தில் விரியும்
உன் அகண்ட விழிகளில்
அடக்க முடியாத
சந்தோசத்தை நிரப்பிக்கொண்டு...
மலர்ந்திருக்கும் மகிழ்ச்சியை
மனதிற்குள் மறைத்துக்கொண்டு...
இயல்பாய் கேட்பதுபோல
"என்ன இந்த பக்கம்..." என்கிறாய் !
நான் உன் முகத்தையே
உற்றுப்பார்க்க...
வெட்கம் சிந்தும் சிரிப்புடன்
சட்டென வேறுபக்கம் திரும்பிக் கொள்கிறாய்...
அடியே...
நீ திரும்பிய திசையெங்கும்
திணறிச் சிதறுகிறது
என் நீ கொண்ட காதல் !
Subscribe to:
Post Comments (Atom)
பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...
ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...
கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...
தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...
பிரியமுடன்...
பிரியன்...
No comments:
Post a Comment