Monday, August 18, 2008

மௌனக் கூச்சலிடும் மனது…

ஒரு பெண்மைக்கே உரிய நளினத்தோடு
நீள்கின்ற பேச்சுக்கிடையில்
அனிச்சையாய் நீ உன்ஆடைகளை சரிசெய்யும்பொழுது…

மௌனக் கூச்சலிடும் எனது மனது…


ஒரு குழந்தை கதை சொல்வதைப்போல
கண்களை அகல விரித்து
கைகளை ஆட்டி ஆட்டி
நீ பேசும்பொழுது…

மௌனக் கூச்சலிடும் எனது மனது…


சில நாட்கள் உன்னைப் பாராமல்
வாடி இருந்து
பார்ப்பதற்காய் காத்திருக்கையில்
தூரத்தில் உன்னை பார்த்தவுடனே…

மௌனக் கூச்சலிடும் எனது மனது…


ஒரு மழைநாளில் மெல்லிய குளிரில்
சிந்தும் தூறல்களை பிடித்து விளையாடியபடியே
என் குடைக்குள் நெருக்கமாய்
நீ நடந்துவரும் பொழுதில்…

மௌனக் கூச்சலிடும் எனது மனது…


வார்த்தைகள் முழுக்க தீர்ந்துபோய்
பார்வைகள் மட்டும் பரிமாறிக்கொண்டிருக்கும்
அந்த மோனநிலை நிமிடங்களில் எல்லாம்…

மௌனக் கூச்சலிடும் எனது மனது…

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...