Wednesday, July 30, 2008

காதல் கடிதம்…


விடிய விடிய பக்கம் பக்கமாய்
எழுதிக்கொண்டுவந்து கொடுத்தபின்னும்
எதையோ விட்டுவிட்டதைபோல்
திருப்தியின்மை எனக்கு !


திரும்பத் திரும்ப திருப்பித் திருப்பி
படித்து முடித்த பின்னும்
மீண்டும் மீண்டும் படித்து ரசிக்க
இன்னும் இன்னும் நேரம் வேண்டும் உனக்கு !

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...