Friday, July 18, 2008
என்ன செய்கிறாய் என்னை …
நீ கொடுத்த கடிதங்கள், பரிசுப்பொருட்கள்…
நாம் இதுவரை சந்தித்த நாட்கள்…
போட்ட சண்டைகள்…
என்று அனைத்தையும் கணக்கு தவறாது
சின்னக் குழந்தை தனது மிட்டாய்களை
எண்ணி எண்ணிப் பார்ப்பதைப்போல
கணக்கு வைத்திருக்கிறேன் எனக்குள்ளே !
இந்த பொல்லாத முத்தங்களை மட்டும்
எப்பொழுதும் எண்ணிவிட முடிவதில்லை…
ஹேய்... அப்பொழுது மட்டும்
என்னை என்ன செய்கிறாய் நீ…
Subscribe to:
Post Comments (Atom)
பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...
ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...
கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...
தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...
பிரியமுடன்...
பிரியன்...
No comments:
Post a Comment