Thursday, July 24, 2008

நமக்கான விடியல்கள்…

இலட்சியம் சுவாசித்து கொள்கையை நேசித்து
வெற்றியை நீ காதலி !

முயற்சி வாள்கொண்டு திறமைப் போர்செய்து
தோல்வியை நீ தோற்க்கடி !

கற்றது கையளவு உள்ளது கடலளவு
எப்போதும் பசியாயிறு !

உனக்கும் பொறுப்புண்டு உணர்ந்தால் சிறப்புண்டு
வரலாற்றில் உன் பேர் நடு !

இனிவரும் விடியல்கள்
உனக்கென உனக்கென விடியட்டும் !

இனிவரும் காலங்கள்
உன் புகழ் உன் புகழ் உரைக்கட்டும் !

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...