Wednesday, July 16, 2008

பறவையின் பாடல் !


எப்போதும் தொடர்கின்ற
சாதனைப் பயணத்தில்
வெற்றிகளும் தோல்விகளும்
நித்தம் நித்தம் யுத்தம் செய்து
பலமுறை வெற்றிகளும் சிலமுறை தோல்விகளும்
வெற்றித் தோல்விகளை
மாறி மாறி சந்தித்துக்கொண்டிருக்கும்…

அந்த மழைக்கால வேளையில்
போதிமரக்கிளையில்
நண்பர்களோடு சேர்ந்து
நினைவுகளை கொத்தித் தின்றபடி
கவலை அறியா ஒரு ரகசியப் பறவையாய்
இசையோடு அமர்ந்திருக்கிறேன்
எனக்கேயான பாடல்களை
எல்லோருக்குமாய் பாடியபடி…


No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...