Wednesday, July 16, 2008

சுகமான பொழுதுகள்…


ராத்திரிக்குள் அகப்பட்ட
நிலவைப் போல…

கூந்தலுக்குள் அகப்பட்ட
பூக்கள் போல…

கோவிலுக்குள் அகப்பட்ட
கடவுள் போல…

கருவறைக்குள் அகப்பட்ட
குழந்தை போல…

உன் நினைவுகளுக்குள்
அகப்பட்ட பொழுதுகள்
எத்தனை சுகமானவை !

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...