Monday, December 8, 2008

கனவுகளின் இளைப்பாறுதல்…

உன் உறக்கத்தில் மெல்ல நுழையும்

என் அழகான கனவுகள் இளைப்பாற

உன் தலையணையின் ஓரத்தில்

எனக்கும் கொஞ்சம் இடம் விட்டுத் தூங்கு…



நீ விடும் சுவாசத்தினால்

உன் தனி வாசத்தினால்

அது இன்னும் அழகாகக்கூடும்

என்னைப் போல !

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...