Monday, December 8, 2008

பதில் இல்லை என்னிடம்…

வெள்ளிக்கிழமை தாவணி… விழாநாள் சேலை…

எப்பொழுதாவது கட்டும் பட்டுப்புடவை…

நெற்றியில் சின்ன குங்குமக் கீறல்…

விரல்கள் மடித்த மல்லிகைப் பூக்கள்…



சட்டையில் ஒட்டிக்கொள்ளும் ஸ்டிக்கர் பொட்டுக்கள்…

தெறித்து விழும் வளையல் துண்டுகள்…

காதுக்குள் மழை தூறும் கொலுசொலி…



இவைகளை எல்லாம் பிடித்ததினால்

உன்னை எனக்கு பிடித்திருக்கிறதா !

அல்லது…

உன்னை எனக்கு பிடித்ததினால்

இவைகளெல்லாம் பிடிக்கின்றனவா என்பதற்கு

என்றும் பதில் இல்லை என்னிடம்…

 

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...