அன்றொருநாள்
காதலின்வலி உடல்வலியை மிஞ்ச...
ரத்தம் வழிய வழிய
பழைய ஊசியால் கையைக் கிழித்து...
என் முன்னாள் காதலியின் பெயரை
சுகத்தோடு பதிந்துவைத்த
அந்த தழும்பை மெதுவாய் தடவியபடியே…
“இது என்னப்பா…” எனக் கேட்கும்
என் சின்னப்பிள்ளைக்கு
ஒரு பொய்யான புன்னகையைத்தவிர
வேறு எதை நான் பதிலாகத் தரமுடியும்…
1 comment:
அருமையாய் இருக்கிறது பிரியன்....
Post a Comment